கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 24 ஆயிரத்து 357 பேர். நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 9 பேர் குணமடைந்ததால், இது வரை 24 ஆயிரத்து 25 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 43 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 528 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் இது வரை 278 பேர் இறந்துள்ளனர். நேற்று இறப்பு இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE