நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் நிற்பதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நிற்கிறது. மழை பாதிப்புகளை சரி செய்ய சிறப்பு அதிகாரியாக ஜோலார்பேட்டை நகராட்சி கமிஷனர் ராமஜெயம் நியமிக்கப்பட் டுள் ளார்.திடீர்குப்பத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை பல நாட்களாக தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இவற்றை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE