புதுச்சேரி : விபசார கும்பலுக்கு, போதை ஊசி சப்ளை செய்த ரஷ்ய நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை போலீசார் கடந்த 5ம் தேதி விடுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதியில் விபசார கும்பல் மற்றும் கஞ்சா கும்பல் சிக்கியது. அவர்கள் இருந்த அறையில் போதை ஊசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், விபசார கும்பலுக்கு போதை ஊசி மற்றும் கஞ்சா சப்ளை செய்த ஆரோவில்லில் வசித்து வரும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யுவான், 27; என்ற வாலிபரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து போதை ஊசி மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ரஷ்ய துாதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, யுவானுக்கு போதை ஊசிகள் மற்றும் கஞ்சா யார் கொடுத்தது, இவருடன் யார், யார் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE