நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு கொண்டை கடலை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதித்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு 5 கிலோ கொண்டை கடலை விலையின்றி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.நெல்லிக்குப்பத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டிற்கு 5 கிலோ கொண்டை கடலை விலையில்லாமல் வழங்கினர்.சில நாட்களாக மழை பெய்ததால் உணவுக்கு சிரமப்பட்ட மக்கள் ஆர்வமுடன் கொண்டை கடலையை வாங்க குவிந்தனர். மற்ற ரேஷன் கார்டு வைத்திருப் போருக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒரு கிலோ துவரம் பருப்பு விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE