சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், விளை பொருட்கள் வீணாகிறது.
மங்களூர் ஒன்றியத்தில் சிறுபாக்கம், அடரி, அரசங்குடி, ஒரங்கூர், மா.புதுார், வினாயக நந்தல், பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மங்களூர் உட்பட 66 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதிகளில் நிவர் மற்றும் புரெவி புயலால் பெய்த கனமழை காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.மானாவாரி பயிரான மக்காச்சோளம், பருத்தி, உளுந்து பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி, நாசமாகி வருகிறது. தோட்டக்கலை பயிரான மரவள்ளி, கருணை, மஞ்சள் மழை காரணமாக அழுகி வருகிறது. இதனால் மகசூல் பாதித்து நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மழை பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE