காரைக்கால் : காரைக்காலில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காரைக்காலில், ஜப்பானீஸ் கோஜீரியு போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கராத்தே, சிலம்பம், நிஞ்சா, வோவினம், குபுடோ, குங்பூ மற்றும் யோகா போட்டிகள் குமார் தலைமையில் நடந்தது.போட்டியில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் முதலிடத்தை திருச்சி மகாகுரு விஜயகுமார் அணியும், இரண்டாம் இடத்தை வி.ஆர்.எஸ்., மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியும், மூன்றாம் இடத்தை சென்னை சத்யராஜ் ஆசான் அணி பிடித்தது.வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சண்முகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் கனகசேகரன் தலைமையில் பதக்கம், கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE