புதுச்சேரி : தனிமையால் விரக்தியடைந்த டைலர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரம் முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்,46; டைலர். இவரது மனைவி ஆண்டாள் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது மகள் தனலட்சுமிக்கு மூன்று மாதத்திற்கு முன் திருமணம் முடிந்து, கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மகன் சதீஷ்குமார் டைல்ஸ் வேலைக்காக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றுவிடுவார். இதனால், வீட்டில் தனிமையில் இருந்ததால் மனமுடைந்த கிருஷ்ணன், நேற்று முன்தினம் வீட்டிலேயே தாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE