வேப்பூர் : வேப்பூர் அருகே பாசன வாய்க்காலில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த புல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 39; கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை 7:00 மணியளவில் விவசாய கூலி வேலைக்கு அதே பகுதியில் நீர்பாசன வாய்க்கால் வழியே நடந்து சென்றார். அப்போது, பாசன வாய்க்கால் பள்ளத்தில் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement