கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் மசோதா தொடர்பாக அரசியல் கட்சியினர் போராட்டம் செய்யாமல், சட்டப்படி தீர்வு காணுமாறு எஸ்.பி., ஜியாவுல் ஹக்கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: சமீபகாலமாக வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வேளாண் மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளது.இது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியினர் போராட்டம் செய்யாமல், சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும் போராட்டம் தீர்வாகாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE