சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பள்ளி மாணவியைக் கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது 16 வயது மகள் அதே பகுதியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவரை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிறுமியின் தாய், தனது மகளை சேலம் மாவட்டம், சிவந்தாபுரத்தைச் சேர்ந்த உறவினர் பச்சையப்பன் மகன் சுரேஷ் கடத்திச் சென்றதாக கொடுத்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE