சின்னசேலம் : சின்னசேலம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த தொட்டியம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பொன்முடி மகன் பெரியசாமி, 30; இவரது மனைவி ராஜலட்சுமி, 24; இவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.திருமணமான நாளிலிருந்து கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், ராஜலட்சுமியை கடந்த 5ம் தேதி மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE