சின்னசேலம் : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசை கண்டித்து சின்னசேலத்தில் கம்யூ., கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சின்னசேலம் தனியார் வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.ஒன்றிய செயலாளர் ஜான்பாஷா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மீதான கொலைவெறி தாக்குதலைக் கை விட வேண்டும். விவசாயிகளின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து, தொழிலாளர்களின் விரோத சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE