உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.உளுந்துார்பேட்டை அடுத்த பரியநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மதன், 11; அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி மாலை நண்பர்களுடன் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.தகவல் அறிந்த குமரகுரு எம்.எல்.ஏ., நேரில் சென்று சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement