விழுப்புரம் : தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் அடுத்த டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் கணேசன், 27; இவர் மீது விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.இதையடுத்து, கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கணேசனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE