திண்டுக்கல் : மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் நேற்று அனைத்து சங்க டாக்டர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்க திண்டுக்கல் தலைவர் கோடீஸ், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் நாகராஜன், பல் மருத்துவ சங்க செயலாளர் ஆனந்த் யோகேஷ், அரசு டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஷேக் மற்றும் டாக்டர் சுரேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
மத்திய அரசு ஆயுஷ் முலம் சித்தா, ஆயுர்வேத, யோகா மற்றும் யுனானி படிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேற்படிப்பில் அதனை நவீன அலோபதி மருத்துவ முறையில் கற்பது மற்றும் பயிற்சி அளிப்பது ஏற்க கூடியது அல்ல. உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற கலப்பு மருத்துவப் படிப்பு கிடையாது. மத்திய அரசின் இச்செயல்பாட்டை ஏற்க முடியாது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பழநியில் ஆர்ப்பாட்டம்பழநியில் அரசு மருத்துவமனை எதிரில் இந்திய மருந்துவ சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம்நடந்தது. இதில் சங்கத் தலைவர் குணசீலன், செயலாளர் பிரேம்சந்த், இந்திய பல்மருத்துவர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE