ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து வினாடிக்கு 200 க.அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையின் உயரம் 90 அடி. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று மதியம் 12 மணிக்கு நீர்மட்டம் 88 அடியை எட்டியது. அணை நிரம்ப 2 அடிகளே உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.செயற்பொறியாளர் கோபி ஷட்டரை இயக்கி நீரை திறந்து விட்டார். உதவி செயற்பொறியாளர்கள் உதயகுமார், தமிழ்செல்வன், நாகராஜ், அருண், பணி ஆய்வாளர் அழகேசன் உடன் இருந்தனர்.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 236 க.அடியாக உள்ளது. அணையிலிருந்து 200 க.அடி நீர் நங்காஞ்சி ஆறு வழியாக முத்துசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE