மதுரை : விடுதலைக்காக போராடியதில் 'மதுரை காந்தி' எனப்படும் என்.எம்.ஆர்.சுப்புராமன் பெயரை மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு சூட்ட முன்னாள் எம்.பி., ராம்பாபு முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து ராம்பாபு கூறியதாவது: சுப்புராமன் வீடு, நிலம், செல்வம் என அனைத்தையும் விடுதலைக்காக அர்ப்பணித்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டார். அவரது பெயரை ரயில்வே ஸ்டேஷனுக்கு சூட்ட முதல்வர் வழிகாட்டுதல்படி மாநில உள்துறை செயலாளர் பரிந்துரைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகா ஹவேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு விடுதலை வீரர் மகாதேவப்பா மைலாரா பெயர் வைக்க அம்மாநில அரசு பரிந்துரைத்தது. தமிழக அரசும் பரிந்துரைக்க வேண்டும், என்றார். சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்க தலைவர் குமரன் பி. ஜகுவாவும் வலியுறுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE