பேரையூர் : பேரையூர் தாலுகாவில் சந்தையூர், பாறைப்பட்டி, கீழப்பட்டி, சிலைமலைபட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது இப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் அதிகமான ஈரப்பதம் ஏற்பட்டு வெங்காய பயிரில் திருகல் நோய் ஏற்பட்டுள்ளது. செடியின் நுனி பகுதி கருகியுள்ளது. தொடர்ந்து செடிகள் வளர்ச்சி இன்றி போய் வருகின்றன.விவசாயிகள் கூறியதாவது: சேதமடைந்த வெங்காயம் எதற்கும் பயன்படாது. காலநிலை மாற்றத்தால் வெங்காயம் முழுவதும் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.80 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE