பவானி: பவானி நகராட்சி, ஏழாவது வார்டு திருவள்ளுவர் நகர், காளியம்மன் கோவில் வீதியில், அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு ஆறு குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, வேக வைத்த முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வந்த முட்டைகளில் சில, ஓடுகளின் நிறம் மாறி காணப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த ஊழியர்கள், உடைத்து பார்த்தபோது, மஞ்சள் கரு அழுகியிருந்தது. இதனால் குழந்தைகளுக்கு அவற்றை தரவில்லை. இதையறிந்த பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளுக்கு அனுப்பும் முட்டையை, தரமாக அனுப்ப வேண்டாமா? என்றும், கேள்வி எழுப்பியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE