ஈரோடு: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும், என வலியுறுத்தி, தமிழர் கழகம் கட்சி சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குணசேகரன், நிறுவன தலைவர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE