மொடக்குறிச்சி: கொடுமுடி இரட்டை கொலை வழக்கில், தம்பதியின் வாரிசுதாரர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. கொடுமுடி, சிட்டபுள்ளபாளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்த தம்பதியர் ராமசாமி, 57, அருக்காணி, 56; கோஷ்டி மோதலில், கடந்த மாதம், 14ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சூர்யா, கிருபாகர சங்கர், சாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தம்பதியின் வாரிசுதாரர்களான பூபதி, யுவராஜ், மேனகா ஆகியோருக்கு, தலா, 2.75 லட்சம் ரூபாய் வீதம், 8.25 லட்சம் ரூபாய் நிவாரணமாக, எஸ்.பி., தங்கதுரை, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், தாசில்தார் ஸ்ரீதர் வழங்கினர். யுவராஜ், மேனகா வசிக்கும் வீடுகள் சேதமடைந்து, இடம் பற்றாக்குறையாக இருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே இருவரும், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து இருவருக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE