ஈரோடு: நீட் தேர்வில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோட்டில் நேற்று முன்தினம் முன்னாள் ராணுவத்தினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாவட்ட தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட, 50 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடந்த போராட்டத்தில், 25 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தூய்மை பணியாளர் சங்கம், கிராம பஞ்., டேங்க் ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 50 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்வி உதவி தொகை கேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 60 பேர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், அரசின் அறிவுரையை ஏற்காமல், தொற்று பரவும் என தெரிந்தும், பொது இடத்தில் ஒன்று கூடியதாக, இவர்கள் மீது, டவுன் மற்றும் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE