சேலம்: சேலம் மாவட்ட, முதன்மை நீதிபதி குமரகுரு வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம், வரும், 12ல் நடைபெற உள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரசமாகவும் முடிக்கப்படும். இதில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை, வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்கு, சொத்துவரி பிரச்னை உள்ளிட்ட வழக்குகளை தீர்த்துக்கொள்ள முடியும். சமரச முறையில் தீர்க்கப்படுவதால், வெற்றி தோல்வி நிலை இல்லாததால், உறவு முறை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்புள்ளது. நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE