சேலம்: சேலம் மாவட்டத்தில், புதிதாக, 64 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலம், அரசு மருத்துவமனை கொரோனா வார்டில், அனுமதிக்கப்பட்டவர்களில், ஏழு பெண்கள், ஏழு ஆண்கள் குணமாகி நேற்று, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதிதாக, சேலம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 64 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சேலம் மாநகராட்சியில், 37 பேர், இடைப்பாடியில் நால்வர், இளம்பிள்ளையில் மூன்று பேர், மேச்சேரி, ஓமலூர், வீரபாண்டியில் தலா இருவர், கொளத்தூர், மேட்டூர், நங்கவள்ளி, சங்ககிரியில் தலா, ஒருவர் வீதம், மாவட்டத்தில் மொத்தமாக, 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, ஈரோடு, தர்மபுரியை சேர்ந்த தலா நான்கு பேர், நாமக்கல்லை சேர்ந்த இருவர் என, சேலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள், 64 பேர் என தெரியவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE