ஓசூர்: மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக, நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், ஓசூரில் நேற்று வழக்கம்போல், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன. கர்நாடகா, தமிழகம் இடையே, பஸ் போக்குவரத்தும் தொடர்ந்து இயக்கப்பட்டது. டில்லியில் போராட்டம் நடத்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், இ.கம்யூ., சார்பில் ஓசூர் ராம்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமையில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அதை, போலீசார் தடுக்க முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
* தர்மபுரி நான்கு ரோட்டில் நேற்று, தி.மு.க., மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி, சி.பி.எம்., மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் தேவராஜன் உட்பட, தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
* அரூரில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. மக்கள் நடமாட்டமும் வழக்கம் போல் இருந்தது.
* கிருஷ்ணகிரி ரவுண்டானாவில், நகர தி.மு.க., சார்பில், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார்.
* கிருஷ்ணகிரியில், சென்னை சாலையிலுள்ள போக்குவரத்து நகர கிளை பணிமனை முன், தொ.மு.ச., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE