சென்னை: டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நேற்று நாடு முழுதும், 'பந்த்' போராட்டம் நடந்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில், நேற்று பயணியர் வருகை குறைந்தது. சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு நேற்று, 103 விமானங்கள் இயக்கப்பட்டு, 7,700 பேர் பயணித்தனர். பல்வேறு நகரங்களில் இருந்து, 103 விமானங்களில், 8,100 பேர் சென்னை வந்தனர்.போதிய பயணியர் இல்லாததால், சென்னையில் இருந்து, நேற்று காலை, 9:05க்கு மதுரை செல்ல வேண்டிய விமானம், மதுரையில் இருந்து, நேற்று காலை, 11:15 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானம், சென்னையில் இருந்து நேற்று மதியம், 2:00 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE