மதுரை : 'தமிழகத்தில் திருவிழாக்கள் இல்லாத நாட்களில் சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும்,' என, மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
அதன் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளதாவது:
கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கள்ளழகர் எதிர்சேவை அன்று நடந்ததால் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் போலீசாருக்குசிரமம் ஏற்பட்டது. திருவிழா காலங்களில் பக்தர்கள் கோயில், சுவாமி தரிசனத்திற்கு செல்வதால் ஓட்டுப்பதிவு சதவீதமும் குறைந்திருந்தது. எனவே அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை பொதுதேர்வுகள், குறிப்பாக மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட விழாக்கள் இல்லாத நாட்களில் நடத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் தேர்தல் கமிஷனுக்கு முன்கூட்டி பரிந்துரைக்க வேண்டும்.அனைவரும் தவறாமல்ஓட்டளிக்கும் சூழ்நிலையை தேர்தல் கமிஷன் ஏற்படுத்திட வேண்டும், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE