ஆனைமலை: தி.மு.க. மகளிரணிச் செயலாளர் எம்.பி. கனிமொழி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (9ம் தேதி) காலை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் சுங்கம் அருகே, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில், கனிமொழி பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரானது; விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடகு வைக்கக்கூடிய சட்டம். மேலும், மக்களுக்கு உணவு பாதுகாப்பை தராத சட்டங்கள் தான் இவை. இச்சட்டங்களை ஆரம்பம் முதல் எதிர்த்ததுடன், சட்டத்தை ரத்து செய்ய போராடும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பது தி.மு.க., தான். இச்சட்டங்களை ஆதரித்த, பா.ஜ., அல்லாத ஒரே முதல்வர் பழனிசாமி தான். விவசாயிகளுக்கு தப்பித்தவறி ஏதேனும் உதவித்தொகை வழங்கினாலும் கூட, அவை ஆளும்கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலையை மக்கள் கண்கூடாக காண்கின்றனர். விவசாயிகளுக்கான, மக்களுக்கான கட்சி தி.மு.க., தான். இவ்வாறு, பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE