குளித்தலை: தோகைமலை யூனியனில், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் பணி நடக்கிறது. குளித்தலை அடுத்த, தோகைமலை வட்டார வள மையம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியும் பணி நடக்கிறது. இதில், 20 பஞ்சாயத்திலுள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. ஆசிரியர் பயிற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள், சிறப்பாசிரியர்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் எவரேனும் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருப்பின், அருகிலுள்ள பள்ளி தலைமையாசிரியர் அல்லது வட்டார வளமைய மேற்பார்வையாளருக்கு தகவலளிக்கலாம் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE