கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது. சேர்மன் சந்திரமதி தலைமை வகித்தார். குடிநீர், தெரு விளக்கு பிரச்னை, மகிளிப்பட்டி சாலை வசதி குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அம்மா சிமென்ட் உற்பத்தி இல்லாததால், தனியார் சிமென்ட் வினியோகம் செய்ய தேவையான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் சிமென்ட் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பி.டி.ஓ.,வெங்கடாச்சலம் தெரிவித்தார். வளர்ச்சி பணிகள் குறித்து பேசப்பட்டது. துணை சேர்மன் கவிதா, ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE