கரூர்: புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறக்கோரி, கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட, பல்வேறு அமைப்புகளை சேர்ந்த, 26 பெண்கள் உள்பட, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய, பா.ஜ., அரசு மற்றும் மாநில, அ.தி.மு.க., அரசை கண்டித்தும், டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழகம் முழுவதும் நேற்று, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. கரூரில், தபால்-தந்தி அலுவலகம் முன், மா.கம்யூ., இ.கம்யூ., வி.சி.க., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 28 பெண்கள் உள்பட, 100 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
* கரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த, சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற, மக்கள் அதிகாரம் அமைப்பினர் நிர்வாகி சக்திவேல் தலைமையில் வந்திருந்தனர். அவர்களில், 10 சிறுவர், சிறுமிகளும் இருந்தனர். அவர்களையும் போலீசார், வேனில் ஏற்றி கரூர் நாரத கனா சபைக்கு, அழைத்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE