கரூர்: கரூரில் திருமணம் செய்து கொள்வதாக, இளம்பெண்ணை ஏமாற்றியதாக, வாலிபர் மீது மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் கே.வி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராஜசேகர், 24; டெய்லர். இவர், கரூர் மாவட்டம் ஏமூரை சேர்ந்த, 19 வயதுடைய இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால், திருமணம் செய்து கொள்ள ராஜசேகர் திடீரென மறுத்து விட்டதாக, இளம்பெண் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் மகளிர் போலீசார் ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE