கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலையில், காதப்பாறை பஞ்சாயத்து அலுவலகம், யூனியன் அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், சாலைகள் தரமானதாக இல்லை. பல இடங்களில், மண் சாலைகள்தான் உள்ளன. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, வெண்ணைமலை பகுதியில், விரைந்து தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE