நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பிறந்து, 45 நாட்களே ஆன தங்கள் குழந்தையை, வளர்க்க முடியாத காரணத்தால், அதன் பெற்றோர், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திடம், தங்கள் குழந்தையை ஒப்படைத்தனர். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அக்குழந்தைக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் தத்து நிறுவனமான, சேலம் மாவட்டம், டேனிஸ்பேட்டையில் செயல்பட்டு வரும், 'பெத்தேல் குழந்தைகள் தத்து' நிறுவனத்திடம், அந்த குழந்தையை கலெக்டர் மெகராஜ் ஒப்படைத்தார். குழந்தைகள் நலக் குழுமத்தலைவர் கோகிலவாணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா, தத்து நிறுவன மேலாளர் ஞானராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE