நாமக்கல்: நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில், டைல்ஸ் ஷோரூம் நடத்தி வருபவர் பிரதீப், 34. இங்கு, மின்னாம்பள்ளியை சேர்ந்த தியாகராஜன், 52, கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 1ல், வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற, ஆறு லட்சம் ரூபாயை, பொம்மைகுட்டைமேடு அருகே, மோட்டார் பைக்கில் வந்த, மர்ம நபர்கள் பறித்து சென்றனர். நல்லிபாளையம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார், 33, தினேஷ்குமார், 20, ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அவர்கள் இருவரையும், நேற்று இரவு, 8:00 மணிக்கு கைது செய்து, அவர்களிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள செந்தில்குமார் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE