தர்மபுரி: சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, அந்த வழியாக வந்த மற்றொரு லாரி மோதியதில், டிரைவர் உட்பட இருவர் பலியாகினர்.
பெங்களூருவில் இருந்து, ஆப்பிள் லோடு ஏற்றிய லாரி, தர்மபுரி வழியாக, சேலம் நோக்கி சென்றது. லாரியை விருதாசலத்தை சேர்ந்த பழனி, 40, என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக, சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த வெங்கடேசன், 50, என்பவர் உடன் வந்தார். இந்த லாரி நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தர்மபுரி கலெக்டர் இல்லம் அருகே, தேசிய நான்கு வழிச்சாலை அருகே சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த டிரைவர் பழனி, சம்பவ இடத்திலேயே பலியாகினார். படுகாயமடைந்த வெங்கடேசனை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE