கூடலுார் : கூடலுார் வெட்டுக்காட்டில் காட்டு யானைத் தொந்தரவு, தினந்தோறும் பல மணி நேரம் மின்தடையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
கூடலுார் அருகே வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறையில் 160 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட விவசாயங்கள் நடந்து வருகின்றன.இப்பகுதிக்கு சுருளியாறு மின்நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. மின்கம்பி சுருளியாறு வனப்பகுதி வழியாக வருவதால் அடிக்கடி மரங்கள் மின்கம்பியில் சாய்ந்து மின்சப்ளை துண்டிப்பு ஏற்படுகிறது.
வனப்பகுதியில் யானைகள் தொந்தரவால் இதனை சீரமைக்க பல மணி நேரம் ஆகி விடுகிறது. தினந்தோறும் பல மணி நேரம் மின்தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பகல் , இரவில் காட்டு யானைகள் அதிகமாக குடியிருப்பை நோக்கி வருகின்றன. வாழை, தென்னை, இலவமரங்களை அதிகமாக சேதப்படுத்துகின்றன. இதனால் குடியிருப்பை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கவும், நாயக்கர் தொழு வழியாக மின்சப்ளை வழங்கவும் மக்கள் கோரியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE