விருதுநகர் : மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய ராஜபாளையம், தேவதானம், சேத்துார், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. 33 அடி கொண்ட ராஜபாளையம் சாஸ்தா கோயில் அணை நிரம்பியது.ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோட்டம், பேயனாற்று ஓடை, ஆனைக்குட்டம், பிளவக்கல், கோவிலாறு, குல்லுார்சந்தை உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. திருச்சுழி, சாத்துார் பகுதியிலும் லேசான துாறல் விழுந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE