தவறாக பயன்படுத்துகிறது!
இந்திய அரசியலமைப்பை, இப்போது ஒரு கட்சி தவறாக பயன்படுத்தி வருகிறது. நாட்டையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க, நாம் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
சிறந்த எடுத்துக்காட்டு!
கட்டுப்பாடு மற்றும் சகிப்பின்மை குறித்து, ஷியாமா பிரசாத் முகர்ஜி கூறியதை நான் நினைவுகூர்கிறேன். இந்த வார்த்தைகள், மேற்கு வங்கத்தில் நிலவும் சூழலுடன் நன்றாக பொருந்தும். சகிப்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு, முதல்வர் மம்தா பானர்ஜி.
ஜே.பி. நட்டா
தேசிய தலைவர், பா.ஜ.,
அனுமதி அளித்தது ஏன்?
கடந்த, 15 நாட்களில், மூன்றாவது முறையாக, என்னை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்றால், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய, பா.ஜ., அமைச்சர்களை மட்டும்அனுமதித்தது ஏன்?
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE