சென்னை :நீதிபதிகளை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தையும் நீதிமன்ற ஊழியர்களையும் விமர்சித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் முறையாக உணவு உட்கொள்ளாததால் குடல் அழற்சி நோய் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது நுரையீரலில் கொரோனா அறிகுறி இருந்தது. இதனால் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி வாயிலாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![]()
|
இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை கண்காணிக்க மருத்துவ துறை தலைவர் ஸ்ரீதர் தலைமையில் 12 பேர் குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பாலாஜி கூறுகையில் ''நீதிபதி கர்ணன் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. எனவே உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE