திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்துாரில், கோவில் குளத்தில் மூழ்கி, மூன்று சிறுமியர் நேற்று இறந்தனர்.
திருப்போரூர் அடுத்த, ஆலத்துாரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 40; விவசாயி. இவரது மகள் சாதனா, 5; தனியார் பள்ளியில், 1ம் வகுப்பு மாணவி.இவரது அருகாமை வீட்டில் வசிப்பவர், வட மாநிலமான, உ.பி.,யைச் சேர்ந்த ஹரிசங்கர், 45. தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள்கள் ராகினி, 6, ரம்யா, 4.நேற்று காலை, சாதனா, ராகினி, ரம்யா ஆகியோர், அதே பகுதி சாமுண்டீஸ்வரி கோவில் குளத்தின் அருகே விளையாடினர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, மூன்று பேரும் குளத்து நீரில் மூழ்கினர்.குழந்தைகளை காணாமல் தேடி வந்த பெற்றோர், குளத்தில் அவர்கள் மிதப்பதை பார்த்து, உடனடியாக மீட்டனர்.கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, பரிசோதித்த மருத்துவர், மூன்று சிறுமியரும், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.தகவலறிந்த திருப்போரூர் போலீசார், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE