சென்னை:நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஊரடங்கு முழுமையாக விலக்கப்படாத நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி செல்லுபடியாகும் கால அவகாசம், மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், கட்டுமானங்கள், சுரங்க திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம். இதற்கான வழிமுறைகளை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வகுத்து உள்ளது. சில வகை திட்டங்களில், சுற்றுச்சூழல் அனுமதியை குறிப்பிட்ட காலத்தில் புதுப்பிக்க வேண்டும். இந்தாண்டு ஏப்., 30ம் தேதியுடன் பெற வேண்டிய அனுமதிக்கான காலம், 2021 மார்ச், 31 வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE