சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தர் மீதான விசாரணை ஆணையத்தில், பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி, நேற்று, இரண்டாம் நாளாக ஆஜரானார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா நிர்வாகத்தில், பணி நியமனம், 'டெண்டர்' உள்ளிட்ட விவகாரங்களில், முறைகேடு நடந்ததாக, உயர் கல்வி துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலையின் கணக்கு விபரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, பல்கலை பதிவாளர் கருணாமூர்த்திக்கு, ஆணையம், 'சம்மன்' அனுப்பியிருந்தது.
அதையடுத்து, பதிவாளர் கருணாமூர்த்தி, நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து, நேற்று இரண்டாம் நாளாக, அவர் விசாரணைக்கு ஆஜரானார். முறைகேடுகள் தொடர்பாக, அவரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக, அவர் உறுதி அளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE