வேடசந்துார் : 'தமிழகத்தில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க.வுக்கே மக்கள்ஆதரவு உள்ளதால், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்' என அமைச்சர் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
வேடசந்துாரில் அ.தி.மு.க., தேர்தல் பணி குறித்து செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர் சாவிவித்திரி முன்னிலைவகித்தனர். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது: பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கியது ஜெயலலிதா ஆட்சிதான். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில், 379 பேருக்கு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.
அவர்களுக்கு ரூ.15 கோடி தமிழக அரசு செலுத்தியுள்ளது. குடிமராமத்து என்ற பெயரில் குளங்களும் துார் வாரப்படுகிறது. வருகிற தேர்தலில் நல்லாட்சி அமைய அ.தி.மு.க., கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும், என்றார்.கூட்டத்தில் சி.எஸ்.ராஜமோகன்,முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், கவுன்சிலர்கள் பார்த்திபன், தேவசகாயம், புஷ்பவள்ளி மற்றும் அ.தி.மு.க.,வில் இணைந்த தே.மு.தி.க., கவுன்சிலர் ஜானகி, கூட்டுறவு சங்க தலைவர்கள் வைரமுத்து,நெடுஞ்செழியன், வேளாங்கன்னி, கந்தவேல் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE