ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்து உள்ளது.
ராமநாதபுரம் சாலைத்தெரு ரோமன் சர்ச் அருகே ஏ.டி.எம்., மையம் உள்ளது.இதன் அருகிலேயே வங்கி கிளையும் செயல்படுகிறது. இந்த வங்கி ஏ.டி.எம்., மையத்தில் நள்ளிரவு 1:40 மணிக்கு ஏ.டி.எம்., இயந்திரத்தை கம்பியை பயன்படுத்தி உடைக்க முயன்றுள்ளனர். வங்கியின் ராமநாதபுரம் கிளை மேலாளர் ஹரிகரன் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE