ராமநாதபுரம்:முகநுால் மூலம் அறிமுகமான அமெரிக்க பெண் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவரிடம் ரூ.3.52 லட்சம் மோசடி செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகிரி 26. இவர் குவைத்தில் தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முகநுால் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் கிளாரா என்ற ஆங்கிலோ இந்திய பெண்ணின் நட்பு கிடைத்தது. நீண்ட நாட்களாக இருவரும் முகநுால் மூலம் தொடர்பில் இருந்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணின் தந்தை கிட்னி பாதிப்பால் சென்னையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரமாக ரூ.5 லட்சம் தேவைப்படுவதாக சிவகிரியிடம் தெரிவித்துள்ளார்.அவருக்கு உதவி செய்யும் நோக்கில் சிவகிரி ஆக.,25 முதல் 29 வரை ஆன்-லைன் மூலம் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு 4 தவணைகளில் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். ஆனால், சில நாட்களில் அந்த முகநுால் கணக்கு துண்டிக்கப் பட்டது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவகிரி சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு ஆன்-லைன் மூலம் புகார் அளித்தார். ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE