பொள்ளாச்சி : பொங்கல் பண்டிகையையொட்டி, விலையில்லா வேட்டி, சேலைகள், பொள்ளாச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பரிசு பொருட்களும் தமிழக அரசு வழங்குகிறது. அதன் அடிப்படையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேட்டி, சேலைகள் வினியோகிக்கும் வகையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.
வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி தாலுகா பகுதிகளில், 119 முழு நேர ரேஷன் கடைகளும், 49 பகுதி நேர ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, 83,985 வேட்டிகளும்; 83,985 சேலைகளும் வழங்கப்பட உள்ளது.முதற்கட்டமாக, தலா, 15,500 வேட்டி, சேலைகள் வந்துள்ளன. இவை பாதுகாப்பாக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE