ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழக முதல்வரையும், மறைந்த அ.தி.மு.க., தலைவர்களையும் அவதுாறாக பேசும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது கட்சி தலைமையின் அனுமதி பெற்று போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: வெள்ளப்பகுதிகளில் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கும் தலைவரைதான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். கம்ப்யூட்டரில் பேசுபவரை எதிர்பார்க்க வில்லை. மக்களின் தேவைகளை ஸ்டாலின் பேசுவதும் கிடையாது. செய்வதும் கிடையாது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE