உடுமலை : உடுமலை, ராஜேந்திரா வீதியில், கல்வி மாவட்ட அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யா பள்ளியும் அமைந்துள்ளன. பள்ளியின் முன், பல ஆண்டுகளாக, குப்பை கொட்டுவது தொடர்ந்தது.
குறிப்பாக, சந்தை ரோட்டிலுள்ள இறைச்சிக்கடைகளில் மீதமாகும் கழிவுகள் கொட்டி பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசியது.மாணவர்களும், ஆசிரியர்களும், துர்நாற்றம் வீசுவதால் வகுப்புகளை கவனிக்க முடியாமல் முகம் சுளிக்கும் நிலை இருந்தது. குப்பைக்கழிவுகள் கொட்டும் இடம் தொடர்ந்து துாய்மைப்படுத்தப்பட்ட நிலையிலும், கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்தது.
இதுகுறித்து தொடர்ந்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் குப்பைக்கழிவுகள் கொட்ட முடியாத வகையில் கம்பி வேலி அமைத்துள்ளது. மேலும், கழிவுகள் கொட்டாமல் இருக்கவும், எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டு, அவ்விடத்தில் செடிகள் நடப்பட்டுள்ளன.இதனை மீறி வேலிக்கு அருகில் குப்பைக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE