திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 20ல், கொடியேற்றத்துடன் துவங்கி நடந்தது. 29ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.நேற்று வரை, 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த தீபம், 40 கி.மீ., துாரம் வரை தெரிந்தது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தீப தரிசனம் செய்து வந்தனர். இந்த தீப திருவிழா, நிறைவு பெற்றது.
இன்று மலையில் இருந்து, மஹா தீப கொப்பரை கீழே இறக்கப்படும். அதில் இருந்து சேகரிக்கப் படும் தீப மை பிரசாதம், வரும், 30ல், மார்கழி திருவாதிரை நாளில், நடராஜருக்கு சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு, வினியோகம் செய்யப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE